கலகன்
கும்பரஞ்சாமி என்ற அடிமைதனத்தையும் நமஸ்காரம் என்ற ஆதிக்கத்தையும் அழித்தொழித்த வணக்கம் வாழ்கவே!
Saturday 24 March 2018
Wednesday 21 March 2018
நாத்திகர்கள் வீட்டு பெண்கள் கோவிலுக்கு போவது தடுக்காதது ஏன்?
கேள்வி: நாத்திகர்கள் வீட்டு பெண்கள் கோவிலுக்கு போவது தடுக்காதது ஏன்?
சமஸ்கிருத வேதத்தில், வேதத்தை நம்பாதவர்கள் நாஸ்திகர்கள் (நாத்திகர்கள்) என்று குறிப்பிடுகிறது. கடவுள் நம்பிக்கைக்கும் நாத்திகத்துக்கும் நேரடி தொடர்பு இல்லை.
ஒரு கொள்கையை போதிப்பது தான் பகுத்தறிவு. புகுத்துவது அல்ல.
கடவுள் இருக்கார் கண்மூடி நம்பு, எதிர் கேள்வி கேட்காதே என்று சொல்வது பக்தி. நானே சொன்னாலும் நம்பாதே, நீ அலசி ஆராய்ந்து முடிவு எடு என்று எல்லா கூட்டத்திலும் சொல்பவர் பெரியார்.
உங்களுக்கு தான் கடவுள் நம்பிக்கை இல்லையே, ஏன் கோயில் கருவறையில் நுழையும் போராட்டம் என்று கேட்டனர். அதற்கு பெரியார், கடவுள் இல்லை என்பது என் நம்பிக்கை. எந்த மனிதனும் கோவிலுக்குள் போகலாம் என்பது அவன் உரிமை. ஒரு சரராசரி மனிதனின் உரிமைக்காக தான் இந்த போராட்டம் என்றார்.
பெரியார் தான் நடத்திய ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் இறைவாழ்த்து பாடுவதை தடுத்ததில்லை. நான் சோறு போடுகிறேன் என்பதற்காக அவர்களுக்கு என் கொள்கையை திணிக்க கூடாது என்றார்.
இப்படிப்பட்ட கொள்கை உடைய பகுத்தறிவாளிகள், தன் வீட்டு பெண்களை, நான் கொண்ட கொள்கையை நீயும் பின் தொடர் என்று பக்திமான்கள் வீட்டில் செய்வது போல் கொடுமை படுத்த மாட்டார்கள். அவரவர் கொள்கைகளை அவரவர் சுயமாக தேர்ந்தெடுக்கட்டும் என்பதுதான் ஜனநாயகம். சுய சிந்தனை சுய அறிவு சுய மரியாதை - அதுதான் பகுத்தறிவு.
தலையில் பிறந்தவன் பிராமணன் - தோளில் பிறந்தவன் சத்ரியன் - தொடையில் பிறந்தவன் வைசியன் - காலில் பிறந்தவன் சூத்திரன். இந்த ஐந்துக்கும் கீழ் பஞ்சமன் அவனுக்கும் கீழ் பெண்கள் (பிராமண பெண்கள் உட்பட). இது தான் வேதம் புராணம் மனு தர்மம் சொல்வது. அணைத்து சலுகைகளும் மேல் வர்ணத்தார்க்கு எல்லா இழி நிலைகளும் கீழ் வர்ணத்தார்க்கு. பெண்கள் எந்த வர்ணமாக இருந்தாலும் ஆண்களுக்கு அடிமை சேவை செய்ய வேண்டும். ஒரு கொலை சூத்திரன் செய்தால் அவன் தலையை எடு. அதுவே பிராமணன் செய்தால் அவன் தலை முடியை எடு என்பன போன்ற இவர்கள் உதாரண சட்டங்கள்.
இந்த கேவலங்களை கேட்டால், எந்த பெண்களுக்காக போராடுகிறமோ அவர்களுக்கே கோவம் வருகிறது.
- கலகன் (21-3-2018)
Monday 19 March 2018
சிலையொன்று முளைக்கும்
அடேய்
பிள்ளையார் சிலையை
உடைச்சாரே பெரியார்
அது சரியா?
பிள்ளையார் சிலையை
உடைச்சாரே பெரியார்
அது சரியா?
வியாபாரமாகி போன
விநாயகரை
விலைகொடுத்து
வாங்கி உடைத்தார்
விநாயகரை
விலைகொடுத்து
வாங்கி உடைத்தார்
அப்படி பெரியாரின்
சிலை தெருவில்
வியாபாரமாக விற்கும்
நாள் வந்தால்
அன்று நீ வாங்கி உடை
கோவில் சிலையும்
கல்தானே
பெரியார் சிலையும்
கல்தானே
எங்கே போனதுடா உன்
பகுத்தறிவு?
கல்தானே
பெரியார் சிலையும்
கல்தானே
எங்கே போனதுடா உன்
பகுத்தறிவு?
கோவில் சிலையின்
கீழ் பிறப்பு இறப்பு
என ஆண்டு எழுத
வக்கு இருக்கிறதா
உனக்கு?
நாளை எனக்கும்
அபிஷேகம் செய்வான்
என தன் கொள்கையையும்
சிலையில் பதித்தவர்
பெரியார்
சாஸ்திரம் வேதம்
இவற்றை கண்மூடி நம்பு
என்பது கடவுள்
நானே சொன்னாலும்
நம்பாதே
நீ பகுத்தறிந்து
முடிவெடு என்றவர்
பெரியார்
நம்பாதே
நீ பகுத்தறிந்து
முடிவெடு என்றவர்
பெரியார்
நாத்திக நாயே
செருப்பால்
அடித்தாலும்
உங்களுக்கு
புத்தி வராது?
செருப்பால்
அடித்தாலும்
உங்களுக்கு
புத்தி வராது?
செருப்பொன்று
விழுந்தால்
அங்கே
சிலையொன்று
முளைக்கும்
அதுதான் பெரியார்
வரலாறு
நீங்கள்
செருப்பால் அடித்தாலும்
மசூதி இடித்தாலும்
சிலைகளை உடைத்தாலும்
பாதிரியாரை எரித்தாலும்
காந்தியை சுட்டாலும்
செருப்பால் அடித்தாலும்
மசூதி இடித்தாலும்
சிலைகளை உடைத்தாலும்
பாதிரியாரை எரித்தாலும்
காந்தியை சுட்டாலும்
அதை உங்களுக்கு
திரும்பி செய்ய
எங்களுக்கு
புத்தி வராது
திரும்பி செய்ய
எங்களுக்கு
புத்தி வராது
- கலகன் (8-3-2018)
Sunday 18 March 2018
Thursday 15 March 2018
Sunday 11 March 2018
Subscribe to:
Posts (Atom)
முக்கிய பதிவுகள்
-
நான்: பிராமணன் மீசை வைக்கலாமா? உனக்கெதற்கு இந்த புரட்சி? பாரதி: புரட்சியா? மூடனே.. தெவசத்துக்கு மட்டும் தான் சவரம் பிராமணனுக்கு மீசைய...
-
கேள்வி: நாத்திகர்கள் வீட்டு பெண்கள் கோவிலுக்கு போவது தடுக்காதது ஏன்? சமஸ்கிருத வேதத்தில், வேதத்தை நம்பாதவர்கள் நாஸ்திகர்கள் (நாத்திகர்...
-
பெண்ணே! துப்பட்டா துறப்பதும் இறுக ஆடை உடுப்பதும் என் தேகம் தெரிந்தால் உனக்கென்ன என்பதும் உன் உரிமை பெண்ணியம் அல்ல சூத்திர பெண்கள...