நான்: பிராமணன் மீசை வைக்கலாமா?
உனக்கெதற்கு இந்த புரட்சி?
உனக்கெதற்கு இந்த புரட்சி?
பாரதி: புரட்சியா? மூடனே..
தெவசத்துக்கு மட்டும் தான் சவரம்
பிராமணனுக்கு மீசையில்லையேல்
அது சாஸ்திர விரோதம்
வடபிராமணனிடம் கற்றுக்கொள்
தெவசத்துக்கு மட்டும் தான் சவரம்
பிராமணனுக்கு மீசையில்லையேல்
அது சாஸ்திர விரோதம்
வடபிராமணனிடம் கற்றுக்கொள்
நா: தமிழ் பற்றி?
பா: யாம் கண்ட மொழிகளிலே,
தமிழ் மொழி போல் இனி எங்கு காணோம்.
நா: ஓஹொ.. சமஸ்கிருதம்?
பா: அது தெய்வ பாஷை.
தமிழ் மனித பாஷை.
ஒப்பிட தகுதியில்லை
தமிழுக்கு
நா: சாதிகள்?
பா: ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி?
நா: ஆயிரம் சாதிகள் இருந்ததினாலே
தான் அந்நியன் எளிதாக நுழைந்தான்?
பா: நால்வர்ணம் நாட்டுநலன்!
நாலு குலங்கள் அமைத்தான் - அதை
நாசம் உறப்புரிந்தனர் மூடமனிதன்
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி
நா: சாதிதான் சமூகம் என்றால்,
வீசும் காற்றில் விஷம் பரவட்டும்
என்றான் ஒருவன்.. சரி விடு.. மதம்?
பா: மதமாற்றம் தடைசெய்!
நா: ஏன்?
பா: பசித்த பஞ்சம் பஞ்சுகளுக்கும்
பால் பவுடர் கொடுத்து மதம் மாற்றும்
அந்நிய பாதிரிகள்
ஹிந்து ஜனங்களின் தொகை வருஷந்தோறும்
அதிபயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது
அதிபயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது
கோமாமிசம் உண்ணாதபடி
அவர்களைச் சுத்தப்படுத்தி மீண்டும்
நமது இந்து சமூகத்திலே
சேர்க்க வேண்டும்
அவர்களைச் சுத்தப்படுத்தி மீண்டும்
நமது இந்து சமூகத்திலே
சேர்க்க வேண்டும்
நா: நடந்தால் தீட்டு தொட்டால்
தீட்டு பார்த்தால் தீட்டு என்று
மனுதர்மம் எழுதி வைத்துள்ள நாட்டில்
அவர்கள் குழந்தைக்கு
பால் கூட புகட்ட முடியாமல்
வக்கற்றவர்களாக வைத்திருந்தது
யார் குற்றம்?
எங்கே ஆளக்கானும்..
ஏய்ய்ய்.. பாரதி ஓடாதே... நில்...
பதில் சொல்..
-கலகன் 3-3-2018
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை தெரிய படுத்தவும்! நன்றி!